Wednesday, December 29, 2010

India Investment Options

Investments in Gold Deposit Scheme
Controlled by SBI, Gold Deposit Scheme was instigated in the year 1998. Investments in this scheme are open for trusts. The investor can deposit invest minimum of 200 gm in exchange for gold bonds holding a tariff free rate of interest of 3% - 4% on the basis of the period of the bond varying with a lock in period of 3 to 8 years.

Moreover, Gold bonds are not entitled of capital gains tax and wealth tariff. The sum insured can be accrued back in cash or gold, as per the investor's preference.


nvestments in Mutual Funds
Mutual Fund firms accumulate cash from willing investors and invest it in share market. Like stock market, mutual fund investment are also entitled for various market risks but with a fair share of profits.


Investments in Insurance policies
Insurance features among the best investment alternative as it offers services to indemnify your life, assets and money besides providing satisfactory and risk free profits. Indian Insurance Market offers various investment options with reasonably priced premium. Some of the popular Insurance policies in India are Home Insurance policies, Life Insurance policies, Health Insurance policies and Car Insurance policies.

Some top Insurance firm in India under whom you can buy insurance scheme are LIC, SBI Life, ICICI Prudential, Bajaj Allianz, Birla Sunlife, HDFC Standard Life, Reliance Life, Max NewYork Life, Metlife, Tata AIG, Kotak Mahindra Life, ING Life Insurance, etc.

Wednesday, November 10, 2010

பேஸ்புக் Vs கூகுள்




இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது.

இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள்.

இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது.

“ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது”, என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

எதனால் இந்தத் தடை?

அமெரிக்காவில் கூகுளை விட அதிகம் பார்க்கப்படும் இணையதளமாக பேஸ்புக் மாறியுள்ளது. மேலும் இணையதளப் பயனாளர்கள் மிக அதிக நேரம் செலவிடும் தளமாகவும் பேஸ்புக் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை விளம்பர வருவாயில் பெரிய அளவு அக்கறை காட்டாதது போல காட்டிக் கொண்ட பேஸ்புக்கும் இப்போது கிடைத்துள்ள மவுசை வைத்து பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருகிறது.

இவையெல்லாம் கூகுளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூகுளின் விளம்பர வருவாய் பாதிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இலவச சேவைகள், பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கி தரும் தமது சேவைகளை வைத்து பேஸ்புக் போன்ற தளங்கள் பெரும் பணம் சம்பாதிப்பதை அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே கூகுள் இந்தத் தடையை விதித்துள்ளது.

Wednesday, October 13, 2010

500 மில்லியன் நண்பர்கள் சம்பாதித்த கதை! - ஹாலிவூட்டிலும் காலடி வைத்த பேஸ்புக்

அக்டோபர் 1ம் திகதி வெளியான, 'த சோஷியல் நெட்வோர்க்' திரைப்படம் முதல் வாரத்திலேயே உலகளாவிய ரீதியில் நல்ல வசூலை குவித்துள்ளது.

டாவிட் பின்செர் (David Fincher) இயக்கத்தில் அன்ட்ரிவ் கர்பில்ட், ஜஸ்டின் திம்பர்லேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் ஜெஸ் எய்சென்ர்பெர்க் (Jesse Eisenberg), படத்தில் மார்க் சூகெர்பெர்க்காவே வாழ்ந்திருக்கிறார்.

கொலம்பியா பிக்சர்ஸ் சார்பில், அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தின் கதைவடிவமைப்பை பென் மெஷிரிச் உருவாக்கியிருக்கிறார்.

பேஸ்புக்கையும், ஷூக்கர் பெர்க்கையும் சுழன்றே கதை நகரும்.

2003 இல் தனது ஹவார்ட் பள்ளிக்காக உருவாக்கிய இணையதளம், 6 வருடங்களில் 500 மில்லியன் நண்பர்களுடன் உலகின் முன்னணி சமூகவலை இணையத்தளமாக மாறியதற்கு பின்னணியில் இருந்த ஆதரவையும், எதிர்ப்பையும் நிஜமாக நடந்த சம்பவ பின்னணிகளை கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள்.

உங்களால் சில எதிரிகளை சம்பாதிக்காமல், 500 மில்லியன் நண்பர்களை உருவாக்கமுடியாது என்பது இப்படத்தின் ஹைலைட் வாசகம்.

படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 22,445,653 அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டியது. அனைவருக்கும் நன்கு தெரிந்துவிட்ட ஒருவிடயத்தில், தெரியாமல் போன சுவாரஷ்யங்களை கதைக்கருவாக கொண்டு இயக்கியிருக்கும் வித்தியாசமான முயற்சி, ஹாலிவூட்டின் இன்றைய ஸ்டைலுக்கு புதுசு, என்பதால் படத்திற்கு எக்கச்சக்க பாராட்டு.

படத்தை இன்னமும் பார்க்க தவறியிருந்தால், நிச்சயம் சென்று பார்த்துவிடுங்களேன்!


Wednesday, September 1, 2010

இணையம் பற்றிய சில தகவல்கள்

உலகில் மொத்தம் 180 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 32 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேல் இணையப் பயனாளர்கள் உள்ளனர். இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் உள்ளவர் களின் எண்ணிக்கை 117 கோடி. அதாவது உலக இணையப் பயனாளர்களில் 65% பேர் இந்த பத்து நாடுகளில் உள்ளனர்.



அடுத்த பத்து நாடுகளையும் சேர்த்து, 20 நாடுகளில் உள்ள இணையப் பயனாளர் எண்ணிக்கை 147 கோடி. அதாவது மொத்தத்தில் 82%. சீனாவும் அமெரிக்காவும் இணைந்து, முதல் 15 இடங்களில் உள்ள நாட்டின் பயனாளர்களில் பாதிப்பேர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் இன்டர் நெட்டினைப் பயன்படுத்து வோர் உள்ள நாடுகளில் முதல் இடத்தினை பிரிட்டன் (82.5%) கொண்டுள்ளது. அடுத்தது தென் கொரியா (81.1%) மூன்றாவதாக ஜெர்மனி (79.1%), ஜப்பான் 78.2% மக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்க மக்களின் எண்ணிக்கையில் 76.3% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

முதல் 20 நாடுகளில், 7 நாடுகள் (35%) ஆசியாவைச் சேர்ந்தவை. ஐந்து நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. முதல் 20ல் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் நாடுகள் மூன்று. இந்தியாவையும் சேர்த்தால் நான்கு.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் ஏற்கனவே இன்டர்நெட் பயன்பாடு ஏறத்தாழ அதிக பட்சம் உள்ளதால், அடுத்த வளர்ச்சி, சீனா, பிரேசில், இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பற்றிப் பார்ப்போமா! இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்குச் சற்று முன்னர் தான் இன்டர்நெட் தொடங்கியது. 1995ல் தான் விதேஷ் சஞ்சார் நிகாம் என்னும் பொதுத்துறை நிறுவனம் மூலம் இன்டர்நெட் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1998ல் இந்தியா இதற்கான கொள்கை முடிவை அறிவித்துத் தனியார்களும் இன்டர்நெட் சேவை வழங்க அனுமதித்தது. இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 120 கோடி. இதில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 8 கோடியே பத்து லட்சம்.

அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் ஒரு செய்தி வந்தது. அமெரிக்கர்கள் இன்டர் நெட்டைக் கண்டு பிடித்தார்கள். ஜப்பானியர்கள் அதைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள் என்று. ஓடியது மட்டுமல்ல, அதில் பல அதிசயத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்தனர்.


இன்று உலகில் 7.8 Mbps வேகத்தில் இணைய இணைப்பினைக் கொடுக்கும் மூன்று நாடுகளில் ஜப்பானும் ஒன்று. மிகவும் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வேகத்தைத் தரும் நாடாக ஜப்பான் உள்ளது. மிகப் பெரிய திரை, துல்லியமான படங்கள், ஒலியின் தன்மை எனப் பல பிரிவுகளில் அமெரிக்கர்களை, ஜப்பான் மிஞ்சி விட்டது. ஜப்பான் மக்கள் தொகை 12.68 கோடி. இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 9.91 கோடி

Friday, July 23, 2010

You can search a job by GTALK or Gmail chat



Amazing:

You can search a job by GTALK or Gmail chat..

1.Just invite the jobs@chat.naukri.com to your gmail account for chat.

2.Once you invited the Id will automatically accept your invitation

3.Now you can easily search a job

4.Open that naukri to chat , and enter your requirements:

for ex: Type Java 3 years chennai

ths screen will display the result as show like below





If you type Next then next page will display

So we can easily search job even though job site is restricted

Thursday, July 15, 2010

உங்களுக்கு தெரிந்த தெரியாதவர்களின் இனைய விபரங்களை பெற இனையத்தளம்.- 123 People.com


உங்களுக்குத் தேவையான ஒருவரின் தகவல்களை (இனைய விபரங்களை) பெற்றுக்கொள்ள வேண்டுமா?இந்த (123people.com) தளத்துக்கு சென்று தேடிப்பருங்கள் அவரைப் பற்றி இனையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் தேடித் தருகின்றது. Search பண்ணும் போது World என்பதைக் Select செய்து Search பண்ணவும்.
அவரின் பெயரில் பதிவாகி இருக்கும் Pictures,Phone Numbers,Email Addresses,Premium Public Records,Business Professionals, IMs/Microblogs ,Related Domains, Videos,Weblinks, News, Documents, Criminal Record Check , Blogs, Biographies,Tag Cloud ,Timasa's Social Network Profiles என்று பல தகவல்களை தருகின்றது. தேடித்தான் பாருங்களேன்.

123People.com



Thanks to : http://tamilfa.blogspot.com/2010/07/123-peoplecom.html

Tuesday, July 13, 2010

கூகிள் Vs ஃபேஸ்புக்: இணையத்தின் அடுத்த சூடான போர்?

கூகிள் Vs ஃபேஸ்புக்: இணையத்தின் அடுத்த சூடான போர்?

அமெரிக்காவில் கேம்ப்ரிட்ஜ் எனும் ஊரில் Mark Zuckerberg என்று ஒரு மாணவர் இருந்தார். ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் தனது படிப்பை பாதியிலேயே தூக்கி எறிந்தார். அவருக்கு அந்த பட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. அப்படி தூக்கி எறியும் அளவிற்கு அவரிடம் என்ன இருந்தது? விடுதியில் தங்கி படித்தார்.
நன்பர்களை அழைத்து வைத்துக் கொண்டு ப்ராஜக்ட் செய்வதில் ஆர்வமாய் இருந்தார். தனது 20 வயதில் ஒரு ப்ராஜக்ட் வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டார். தான் படிக்கும் பல்கலைக்கழக தோழர்களுடன் கருத்து பகிரவும், நட்புறவை பேணும் வகையிலும் உருவாக்கப் பட்ட அந்த ப்ராஜக்ட்டிற்கு [thefacebook] எனப் பெயரிட்டார். பல்கலைக்கழகமும் அதனை அனுமதித்தது. அப்போது பல்கலைக்கழக உறுப்பினர் மட்டுமே இனைய வசதி ஏற்படுத்தி இருந்தார். பின்னர், 2005ல் பிற கல்வி நிலையங்களுக்கும் இந்த இனைய அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 2006ல் பதிமூன்று வயதைக் கடந்த யாரும் இனைய வகை செய்தார். தனது ப்ராஜக்ட் இத்தனை தூரம் சென்றடையும் என்று அவருக்கு முதலிலேயே தோன்றி படிப்பை தொடராமல் கைவிட்டார். தன்னம்பிக்கை என்பது இது தான் போலும்.

இணைய உலகில் பேஸ்புக்கின் ஆளுமை:

2008-ஆம் ஆண்டு சமூகவலைத்தளங்களின் ஜாம்பவானாக இருந்தது மைஸ்பேஸ் (mySpace). அதனை இன்று குப்புற விழ வைத்தது ஆர்குட்டோ, ஃப்ரண்ட்ஸ்டரோ இல்லை. அன்மையிலேயே தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தான். ஆர்குட் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் நட்புறவை வளர்க்க பயன்பட்டதே தவிர, ஃபேஸ்புக் மட்டுமே கருத்துக்களை பகிர வகை செய்தது. இதனை குறுவலைச்சரம் (MicroBlog) என்று அழைத்தனர். இதன் மூலம் உரை, படம், கானொளி, மற்றும் எந்த இனையப் பக்கங்களையும் MicroBlog செய்ய முடியும். இங்கே தான் இணைய உலக ஜாம்பவானான கூகிள் மீது முதல் குட்டு விழுந்தது. அடுத்த வேரு எந்த குட்டும் கூகிள் மீது தொடுக்க ஃபேஸ்புக்கிற்கு அவசியம் ஏற்படவில்லை. காரணம், முதல் குட்டில் குனிந்த தலை இன்னும் குனிந்தே உள்ளதே!

சமூக வலைத்தளம் அவசியமா?

நமது தனி-நபர் விவரங்களை யாராவது சேகரித்தால் நமக்குப் பிடிக்குமா? கண்டிப்பாக இல்லை. கேட்டால் ஓட விரட்டுவோம், இல்லையென்றால் ஓடிப் போய்விடுவோம். அதனால் இந்த சமூகவலைத் தளங்கள் கூகிளிற்கு அவசியமாகிப் போகிறது. ஃபேஸ்புக், தனது தளத்தில் உள்ள விளம்பரங்கள் மூலம் லாபம் ஈட்டுகிறது. எந்த விளம்பரதாரர் அதிகம் பயன் பெறுகிறார் என்பதை அறிய, பயனர்களிடம் எந்த விடயம் ஈர்க்கப் படுகிறது என ஆராய வேண்டும். இதை ஃபேஸ்புக் செய்துக் கொடுக்கிறது. கூகிளோ, தனக்கென்று உலகலாவிய விளம்பர சேவையினை இயக்கிக் கொண்டிருக்கிறது. இணையப் பயனாளர்களை எந்த விடயம் அதிகம் கவர்கிறது என்றுத் தெரியாமல் எந்த ஒரு விளம்பர நிறுவனமும் இயங்க முடியாது. கூகிள் தேடலையும் தாண்டி, பயனர்கள் கருத்துக்களை ஏறாளமாக பகிர்ந்து, வெளிப்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம் தேவை ஆகிவிட்டது. கூகிளின் இந்த அடிமடியில் தான் ஃபேஸ்புக் கைவைத்தது.

கூகிளின் தத்தளிப்பும், போராட்டமும்:


இணைய உலகில் கூகிள் மட்டும் என்ன லேசா? ஜிமெயில் மூலம், யாஹூ மெயில், லைவ் போன்ற இன்னும் பல மின்னஞ்சல் சேவைகளை மன்னைக் கவ்வ வைத்தது. சில சேவைகள் மன்னிற்குள் புதைந்தே போனது. தேடல் எந்திரம் மூலம், யாஹூ தேடல் தன்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் சர்ச், லைவ் சர்ச், பிங் என பல கோனங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். விளம்பர சேவையில் கூகிளை மிஞ்ச முடியாதென் மற்ற நிறுவனங்களுக்கும் தெரியும். இனையத்திலேயே அலுவலக ஆவணங்களை திருத்த கூகிள் டாக்ஸ் எனப் பல துறைகளில் வெற்றியை நிலை நாட்டிய கூகிள், சமூகவலைதளம் என்று வரும் போது மட்டும் ஃபேஸ்புக் முன்னர் அப்பாவியாக நிற்கிறது. ஃபேஸ்புக் ஏறத்தாழ உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கூகிள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக் மிக அதிகம். ஆனாலும், BUZZ எனும் புதிய நிரல் மூலம் ஃபேஸ்புக்கை அசைக்க முடியவில்லை.

Buzz எனும் புதிய நிரலை ஜிமேயிலின் மேம்பாடாக வெளியிட்டதன் காரணம், BUZZல் இனையுமாறு அனைவரையும் வேண்டாமல், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இனைத்தால் நேரடியாக அனைவரையும் சென்றடையும்.

BUZZ தோல்வியும், WAVE என்ற ஒரே நம்பிக்கையும்:
BUZZ தோல்வி அடைந்ததாக வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிடிலும், தனது போட்டியாளரான ஃபேஸ்புக்கீடம் தோற்று தான் போனது. காரணம், கூகிளின் BUZZல் கருத்துப் பகிரும் MicroBlog வசதி இருந்தது. ஆர்குட்டிலே சமூக இனக்கம் இருந்தது. இரண்டும் வெவ்வேறு பகுதியில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு இரண்டையும் இனைத்துப் பார்க்கத் தோன்றும் என எதிர்ப்பார்ப்பது நகைச்சுவையான ஒன்று. இதனை கூகிள் மனதில் கொண்டுள்ளது என்றே எதிர்ப்பார்ப்போம். கூகிளின் தத்தளிப்பிற்கு மற்றொரு காரணம், தனது போட்டியாளரான ஃபேஸ்புக்கில் இருக்கும் அம்சங்களை தனது வலைகளிலும் கொண்டு வர வேண்டும் என நினைப்பது. இதனால், ஃபேஸ்புக்கிற்கு நிகராக ஒரு வலை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே உள்ள வசதி தானே என்று பெரும்பாலான பயனர்கள் கண்டுக்கொள்ளக் கூட மாட்டார்கள்.

ஃபேஸ்புக்கினை தற்போதுள்ள தலைமுறையாகவும், கூகிளின் நிரல் அடுத்த தலைமுறையாகவும் இருத்தல் அவசியம். இதை உணர்ந்த கூகிள் ஃபேஸ்புக்கினை முந்தி செல்வதை விட, பெரிய தாவுதல் ஒன்று வேண்டும் என்று உனர்ந்தது. அதிக தொலைவு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, மெதுவாக ஓடினாலும், நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மற்றொன்று accelerated வகை. அதாவது, உந்தி எழுப்பப்பட்ட நகர்வு. ரஜினிகாந்த் இன்று என்ன சொன்னாலும் பன்ச்! காரணம் அவர் தொடக்கத்திலேயே தொடுத்த acceleration! இன்று எத்தனைப் பேர் வந்தாலும் எடுபடாது. இப்படிப்பட்ட acceleration தேவை என தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துள்ளது கூகிள். இதன் வெளிப்பாடே கூகிள் WAVE. இது realtime collaboration அதாவது, நிகழ்-நேர தகவல் பரிமாற்றம் என்று தனது WAVE-இன் குண-நலன்களாக கூகிள் கூறுகிறது.

கூகிள், தான் சமூகவலைத்தளம் எதனையும் உருவாக்கும் வேலையில் என சொல்லாமல் சொல்லி இருக்கும் பட்சத்தில், இப்போதே தனது பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள, தனது சமூகவலைத்தளமான ஆர்குட்டிலும், பல மேம்பாடுகளைக் கொனர்ந்த வன்னம் உள்ளது. உலக அளவில் வெற்றிப் பெறாத ஆர்குட், இந்த மாற்றங்களால், வெற்றி அடைவது என்பது, இழையைக் கொண்டு மலையை இழுப்பது போலத் தான். WAVE தளத்தின், BETA தொகுப்பு வெளியான இந்த சமயத்தில், குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். தலைமுறைகள் தாண்டிய வசதியைத் தரும் இதுப் போல தளங்களைப் பயன்படுத்தி, இணையத்தில் மீண்டுமொரு புரட்சியை ஏற்படுத்துவது எப்போதும் போல பயனர்கள் கையில் தான் உள்ளது. ஃபேஸ்புக் எனும் பழம் புளிக்கும் பட்சத்தில் தான் இது நடக்கும் என வல்லுனர்கள் அறிகின்றனர்.

சைடு டிஷ்:
சமூக வலைத்தளங்கள் நமது தனி நபர் விவரங்களை ஆராய்வதால் நமது தனி-நபர் விவரம் காப்பதில் பங்கம் ஏற்படுமோ?
கண்டிப்பாக ஏற்படும். எனினும், பல தளங்கள் தங்களுக்கென்று சில வரைமுறைகளி பகுத்து வைத்துக் கொண்டுள்ளன. அதாவது, நாம் பயன்படுத்தும் IP முகவரி கொண்டு நாம் வசிக்கும் பகுதி முதற்கொண்டு அறிந்துக் கொள்ள முடியும். மற்றும், நாம் பகிரும் விவரங்களையும் சேர்த்து, நமக்கு என்ன பிடிக்கும், என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப விளம்பரங்களை வழங்கும். அவ்வாறான விளம்பரங்களுக்கு முக்கியத்துவமும் அளிக்கும். இத்தோடு நின்றால் பிரச்சனை இல்லை. நமது விவரங்களை, மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் போது தான் ஆபத்து. எமக்கு தெரிந்த வரையில் கூகிள் தான் உலகிலேயே பெரிய அளவில் தனி-நபர்களுக்கி எந்த விடயத்தில் ஆர்வம் என்று ஆராய்கிறது. ஆனால், கூகிள் மட்டுமே அதிக கட்டுப்பாட்டுடனும் இருக்கிறது. தேடலிலேயே encrypted protocol எனப்படும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரிமாற்றம் வழங்குவது கூகிள் மட்டும் தான். ஃபேஸ்புக்கோ, நம் தகவல் பாதுகாக்கப்படுமானால், நாம் அதற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த வகையில், நமது பரிந்துரை - கூகிள் பக்கம் தான்!


Saturday, May 29, 2010

Multiple gmails in FireFox


Gmail இன்று பலரால் உபயோகிக்க படும் ஈமெயில் வசதிகளில் முதன்மையாக இருக்கிறது . பெரும்பாலான அனைவரும் தற்போது ஜிமெயில் கணக்கு வைத்துள்ளார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் பல ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் .

உதாரணமாக Blogger பயன்படுத்துபவர்கள் அதுகென்று தனி கணக்கு வைத்திருப்பார்கள் . இது போல தேவைக்கேற்ப அவரவர் தனி தனி கணக்குகள் வைத்திருப்பார்கள் .

ஆனால் நெருப்புநரி Firfox மட்டுமில்லாது எந்த இணைய உலவியுளும் ஒரே நேரத்தில் இரு கணக்குகளை பயன்படுத்த முடியாது . Multifox என்ற இந்த நெருப்புநரி-Firefox Addon மூலமாக ஒரே நேரத்தில் இரு கணக்குகளை பயன்படுத்த முடியும் .

இதற்க்கு முதலில் இந்த நெருப்புநரி-Firefox Addon ஐ உங்கள் நெருப்புநரி-Firefox இல் நிறுவ வேண்டும் .
இதை இங்கிருந்து நிறுவலாம்.

இதை நிறுவும் போது நெருப்பு நரி Firefox இல் கீழ்க்கண்ட கேள்வியை எழுப்பலாம் . அதற்க்கு Allow என்ற பட்டனை கிளிக் செய்க. படத்தை கிளிக் செய்த பெரிதாக்கி பார்க்க



நிறுவிய பின் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுக


நெருப்புநரி-Firefox இல்
File -> New Identity Profile என்பதை கிளிக் செய்க .



கிளிக் செய்த பின் புதிய நெருப்புநரி-Firefox Window ஒன்று தோன்றும் . அதில் மற்றொரு ஜிமெயில் கணக்கை பயன்படுத்துங்கள் . அதில் எத்தனையாவது Window என அதன் AddresBar இல் தோன்றும் .


நீங்கள் ஐந்து ஜிமெயில் கணக்குகள் வைத்திருந்தால் ஐந்து தடவை நெருப்புநரி-Firefox இல்
File -> New Identity Profile என்பதை கிளிக் செய்க .

ஒவ்வொரு Windowவிழும் தனி தனி ஜிமெயில் கணக்கு பயன்படுத்தலாம் . மேலும் விபரங்களுக்கு http://br.mozdev.org/multifox/

பென் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.

அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

மென்பொருளை பதிவிறக்க: Rohos Mini

இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.



படம்-1



அதில் Setup USB key என்பதனை கிளிக் செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.

படம்-3

பின் ஒகே செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
கிளிக் செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.

படம்-4

Performing operation என்ற செய்தி திரையில் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.

படம்-5

பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.

படம்-6

பின் Rohos Icon யை கிளிக் செய்து, வரும் விடோவில்
Conect disk என்பதனைகிளிக் செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.

படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்
Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.
படம் 8 யை பார்க்கவும்.

படம்-8

Pendrive யை விட்டு வெளியே வரும் போது.
Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்
Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.


படம்-9



அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
படம் 10 யை பார்க்கவும்.

படம்-10

இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.


Thanks to: http://tamilcomputerinfo.blogspot.com/2010/05/blog-post_28.html

Friday, May 28, 2010

Top most Hire and Fire IT companies in India

Top most Hire and Fire IT companies in India
Hi,


Top most Firing IT companies in India
1) IBM - Right now this is the most firing company for IT professionals. In the last 6 months, this company has fired nearly 20% of their employees because of BG check and performance issues. This is the most insecure company from an IT professional's point of view. They don't have any strategic plans at HR policies regarding employee security. No appraisals (maximum 10%).

2) Accenture - This is second top most firing company. The firing rate is around 5%. This depends upon outsourced projects; they have a unique system where Accenture development centers around the world bid for a project coming into the company. Currently Philippines centre is taking the cake and the Indian centers are in a firing mode.

3) WIPRO - Firing people with very frequent back ground checks and firing them with out even experience letters and relieving letters (will mention as terminated from services)but will promise the employees that they will retain them. After the project is over they will fire away. Will threaten of criminal cases against such employees if they oppose the move and has also filed against some.

4) Intel - Recently joined the league. Running in heavy losses, hence firing 3000 employees in the Banglore center in a phased out manner.

5) CTS - Has a steady firing policy (checking the Educational background and previous employment and also employee performance in work). In a Recent HCL walk-in, around 50% attendees were from this company. Sadly the I-pods have not helped them.

6) CSC - Excellent package but fires folks in Background check and those on bench regularly. Recently fired 400+ employees from its subsidiary Covansys.

7) Satyam - Currently stopped firing. The Attrition rate is very high. No firing from 2005 until now when 1000 employees were fired in Hyderabad.

8. Patni -- They fired so many employees that currently they are facing understaffing and deficiency with number of employees. Very high attrition rate.

9) Keane India -- This USA based company is always involved in firing employees. Although they proudly say that they dont have hire and fire policy. Recently they fired java and as400 professionals after which most of the employees have started to pack their bags. Employees change this company within 1 year.

So take care before accepting offers from these companies.

Secure IT companies in India

1) Microsoft - Has projects till 2050.

2) EDS - Most secure company in India. Not laid off any of its employees even during 2001. Has lots of projects in Defense and financial areas

3) HP - Dream Company. In-house and outsourced projects

4) TCS - A govt. Company.

5) AOL, Google and Yahoo - Best companies to work with, great job satisfaction as well as great salary and work environment. Rarely fires an employee. As they are internet based companies' they offer lots of opportunities to grow.

6) HCL - A good company to be in. Called as a retirement company.

7) HSBC- This is the most secure company. It has never fired any employee, even when they know that the employee is showing fake experience.

8. Aricent- a communication based software company, has never fired any employee and gives great perks & incentives, lot of projects in kitty. Minimal level of attrition.

9) KPIT Cumminns Infosystems Limited -- This is the most secure company not known to many. It has presently acquired CG Smith, Bangalore and has lots of projects in pipe line. Acquisitions plans will continue.

Wednesday, May 19, 2010

கூகுளின் புதிய கூகுள் கேம்ப்

ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.

கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.

இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது?

இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும்.

இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.

பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும்.

இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும்.

இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.

ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.



Tuesday, May 18, 2010

INTERVIEW TIPS

INTERVIEW TIPS


Your resume has caught the eye of the person who organizes interviews and you have been called for the same. What do you do? Well the first step is to gather all the information about the organization – the key people in the organization, major products or services, size in terms of sales and employees, major competitors, latest news reports on the company etc.
Also before appearing for the interview learn as much as possible about the job you are being interviewed for. Anticipate why the organization is interested in talking to you. Make a list of specific examples of achievements from your past, which shows you can meet the organization’s needs. You must also be attired well at the time of interview.

Some important things to remember while appearing for the interview.

Arrive on time.
Introduce yourself in a courteous manner.
A firm handshake.
Listen to what the interviewer has to say.
Do not interrupt the interviewer.
Do not act fidgety while being interviewed. If you are provided with a revolving chair, keep it steady. Unnecessary revolving of the chair would distract the interviewer and annoy the interviewer.
Do not be overbearing, overaggressive or egoistical.
Carry all relevant documents of the achievements mentioned in your resume.
Use body language to show interest.
Always look relaxed, friendly and positive.
Thank the interviewer's before leaving


Mentioned below are some of the favorite questions that an employer might ask and how you should tackle them.

1) Why do you think yourself suitable for the job?

The Interviewer is indirectly asking why he should hire you? You have to highlight the areas from your

background that relate to the present job.

2) What do you see yourself doing five years hence?

The safest answer to this question would be that you desire to be regarded as true professional and

team player. Keep your answer work related bearing in mind that the purpose of the question is to find

whether you plan to stay with the company.

3) How do you propose to make yourself indispensable to the organization?

Briefly state the innovations that you plan to introduce in your work environment.

4) What are your strengths?

The purpose to this question is to discover reasons for hiring you. Here you may mention that besides

the work skills, training and experience that you would offer you also posses qualities like

reliability, enthusiasm, dependability and flexibility. Back these qualities with examples.

5) What are your weaknesses?

This question is mainly meant to discover if you are wrong for the job. You must stress that your

weakness is really your strength. You may state that your weakness is your desire to see your job

through. To be efficient at all times.

6) How would you go about accomplishing a task with a colleague who was difficult to get along with?

This question is meant to find your attitudes towards work pressure. Give job related examples from

your past experience showing your ability to cope with pressure outlining your cheerful attitude.

7) When you resolved a problem?

This is meant mainly to find out if you can think on your feet! Cite examples of decisions that you may

have taken in your previous assignments and the success they had met.

Never state your previous work experience in negative terms. Even if you disagreed with your former

employer always speak of the positive situations of the job. Whenever you speak negatively about

another person or situation in which you were directly involved you run the risk of appearing like a

person who may have difficulty working with others.

Monday, May 17, 2010

பொறியியல் படிக்க சம்பளம்!

கரும்பு தின்ன கூலி! பொறியியல் படிக்க சம்பளம்!

“வேலைபார்க்கத்தான் சம்பளம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் நிறுவனத்தில் படிப்பதற்கே நாங்கள் சம்பளம் தருகிறோம்!” என்கிறார்கள் ஸோஹோ (Zoho) நிறுவனத்தினர். ஸோஹோ என்ற பெயர் மென்பொருள் வட்டாரங்களில் உலகப் பிரபலம். “இதென்ன கலாட்டா?” என்று யோசிக்கும்போதே, ஒரு வருடம் படித்து முடித்தவுடன் எங்கள் நிறுவனத்திலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியும் காத்திருக்கிறது என்று அடுத்த தவுசண்ட்வாலா சரவெடியையும் சரசரவென வெடித்துக் கொண்டே போகிறார்கள்.





விடு ஜூட். ஸோஹோ யுனிவர்சிட்டிக்கு...

சென்னையின் தெற்கு எல்லையான வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் ஒடுங்கியிருக்கும் ஒரு சந்துக்குள் நுழைந்தால்.. பிரம்மாண்டமான வளாகத்தில் வீற்றிருக்கிறது ஸோஹோ கார்ப்பரேஷன். ஒரு கல்லூரிக்குள் நுழைந்தது மாதிரியான அனுபவம். வண்ண வண்ண உடைகளோடு ஊழியர்கள்.

“மைக்ரோசாஃப்டுக்கு நாங்கதான் நேரடி போட்டியாளர் தெரியுமில்லே?” வாசலிலேயே செக்யூரிட்டி கலாய்க்கிறார்.

உள்ளே நுழைந்தால் சாட்டிங், பிளாக்கிங் (Blogging) என்று ஊழியர்கள் பிஸியாக இருக்கிறார்கள். மற்ற ஐடி நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் இவை.

“என்ன இதெல்லாம்?”

“இதெல்லாம் இல்லாம வேலை செய்யுறவங்களுக்கு எப்படிங்க கிரியேட்டிவிட்டி டெவலப் ஆகும்?” சீரியஸாக சொல்கிறார்கள் நிர்வாக ஊழியர்கள். கூகிள் நிறுவனத்தின் பணியாற்றும் பாணி இது என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு இந்திய நிறுவனத்தில் இதுபோன்ற பணிக் கலாச்சாரத்தை பார்ப்பது இதுவே முதன்முறை.

நிஜமாகவே ஸோஹோ ஒரு வித்தியாசமான நிறுவனம்தான். மென்பொருள் என்பது விற்பனைக்கான தயாரிப்பு என்பது இன்றுவரை மென்பொருள் வட்டாரத்தில் சொல்லப்படும் கூற்று. ஸோஹோ நிறுவனத்தின் அடிப்படையே, “மென்பொருள் என்பது வெறுமனே தயாரித்து, விற்கும் பொருளல்ல. மின்சாரம், குடிநீர், கேஸ் போல இதுவும் சேவைசார்ந்த ஒரு தொழில்” (Service oriented profession) என்பதுதான்! அனேகமாக இந்த ஐடியாவோடு இத்துறையில் இருக்கும் ஒரே நிறுவனம் ஸோஹோ கார்ப்பரேஷன் மட்டுமே.

முதல் பாராவில் நாம் குறிப்பிட்ட ‘படிப்பதற்கு சம்பளம்!’ பற்றி கேட்டோம். நம் பின்னால் சாதாரணமாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ஒருவர் சடசடவென்று அருவி மாதிரி பேசத் தொடங்கினார்.

“திறமையான பொறியியலாளர்கள் எங்களுக்கு தேவை. எங்கு போய் அவர்களை தேடுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை. பொறியியல் படித்தவர்களோ அயல்நாட்டுகளுக்கு பறந்துவிடுகிறார்கள். அல்லது மைக்ரோசாஃப்ட், கூகிள் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவர்களை கொத்திக்கொண்டு போய்விடுகின்றன.

நாங்கள்தான் பில்கேட்ஸுக்கு போட்டி என்று சொல்லிக்கொண்டாலும், நாங்கள் சிறிய நிறுவனம்தான். என்ஜினியரிங் முடித்தவர்கள் எங்களிடம் வேலை செய்ய போட்டியெல்லாம் போடுவதில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

\அப்போது உருவானதுதான் இந்த ஐடியா. ஸோஹோ யுனிவர்சிட்டி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். ‘ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வழக்கமான முறையிலேயே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அதுபோல சிந்தித்துதான் அந்தப் பிரச்சினையே நமக்கு உருவாகியிருக்கும்!’

எனவே மாற்றி யோசிக்க ஆரம்பித்தோம்.

எங்கள் நிறுவனத்துக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். அதே நேரத்தில் பணிக்கு சேர்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு சரியாக பொருந்தவேண்டும். பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்தின் போக்குக்கு கொண்டு வருவதற்குள், இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து வேறு பெரிய சம்பளத்துக்கு, பெரிய நிறுவனத்துக்கு பறந்துவிடுவார்கள்.

பொதுவாக பட்டம் படித்தவர்கள் அறிமுறை (theoretical) அறிந்தவர்களாக இருந்தாலும், பணிக்கு சேர்ந்து செயல்பட அவர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பட்டங்கள் மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. பட்டம் படித்தவர்கள்தான் மென்பொருள் நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்றொரு கூற்று இருக்கிறது. அதுவும் தவறானது. ஏனெனில் இன்று உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மூன்று பெரிய மென்பொருள் நிறுவனங்களை நிறுவியவர்களைப் பார்த்தோமானால், அவர்கள் பட்டதாரிகள் அல்ல.

இப்படிப்பட்ட சூழலிலேயே பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எங்களுக்கு வாகாக கல்லூரியில் போதிப்பது மாதிரியே பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்திலேயே பொறியியலாளர்களாக பணிக்கு சேர்த்துக் கொள்கிறோம்” என்றார்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்தான் ஸோஹோகார்ப் நிறுவனத்தின் தலைவராம். பெயர் ஸ்ரீதர் வேம்பு. வயது நாற்பத்தி ஒன்று. பட்டங்கள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லும் இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

எப்படி இயங்குகிறது ஸோஹோ யுனிவர்சிட்டி?

பொதுவாக மேல்நிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே இவர்களது குறி. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர்களையும் விடுவதில்லை. கிராமப்புறப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பேசி, (கல்லூரிகளில் பெரிய நிறுவனங்கள் மாணவர்களை தேர்ந்தெடுப்பது போல) தங்களுக்கான மாணவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பதினாறு வயதிலிருந்து இருபது வயதுக்குள் இருப்பவர்கள் ஸோஹோ யுனிவர்சிட்டியில் படிக்க தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதி?

கணிதத்தில் நல்ல பரிச்சயமும், பேச்சுத் தொடர்பில் வல்லவராகவும் இருத்தல் முக்கியமான தகுதி. நுழைவுத் தேர்வு, மற்றும் நேர்முகம் மூலமாக இத்தகுதிகள் கண்டறியப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்?

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒன்பது முதல் பண்ணிரெண்டு மாதங்கள் வரை கல்லூரிகளில் வழங்கப்படுவதைப் போலவே பேராசிரியர்களை வைத்து கல்வி போதிக்கப்படுகிறது. எட்டு மாணவர்களுக்கு நான்கு பேராசிரியர்கள் என்ற விகிதத்தில் கற்பிக்கிறார்கள் என்றால், கல்வியின் தரத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இங்கு படிப்பவர்களுக்கு மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளம். மதிய உணவும், இரவு உணவும் இலவசம்.

பயிற்சியை முடித்தவர்கள் ஸோஹோகார்ப் நிறுவனத்தில் டெவலப்பர், டிசைனர், குவாலிட்டி அனலிஸ்ட், ப்ரீ-சேல் சப்போர்ட், கஸ்டமர் சப்போர்ட் என்றிருக்கும் பலதரப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில், அவரவர் தகுதிக்கேற்ற பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சம்பளமும் மற்ற நிறுவனங்களில் கிடைப்பதற்கு இணையானதாகவே கிடைக்கும்.

மாணவர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. பயிற்சியை முடித்தவர்களுக்கு இங்கே பணிபுரிய விருப்பமில்லை எனில், வேறு நிறுவனத்துக்குப் போய்ச்சேர எந்தவித தடையுமில்லை. அஞ்சல் மூலமாகவோ, பகுதிநேரமாகவோ வேறு படிப்பு படிக்கவும் கட்டுப்பாடு எதுவுமில்லை.

ஒரு பொறியியல் மாணவர் பட்டம் படிக்கும்போது அவர் செலவு செய்கிறார். ஸோஹோ யுனிவர்சிட்டியிலோ படிக்கும் காலத்திலேயே சம்பாதிக்க முடியும். பணி உத்தரவாதமும் உண்டு என்பதே இத்திட்டத்தின் மிகப்பெரிய பலம்.

ஐந்து வருடங்களில் 18 பேட்ச்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஸோகார்ப் பெற்றிருக்கிறது. ஸோஹோ யுனிவர்சிட்டியில் சேர்ந்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. ஒவ்வொரு பேட்சுக்கும் கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேரிலிருந்து பதினைந்து பேரை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வித்தியாசமான இந்த பணியாளர் தேர்ந்தெடுப்பு முறைக்காக நாஸ்காம் நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டுக்கான புதுமை விருதினை ஸோஹோகார்ப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு :
ஸோஹோ யுனிவர்சிட்டி குறித்த மேலதிக விவரங்களுக்கு :
தொலைபேசி : 044-22431115
மின்னஞ்சல் : univ@zohocorp.com